கடந்த 26ம் திகதி வட சென்னைப் பகுதியை நிவர் புயலானது தாக்கியிருந்தது.
குறித்த புயலானது தமிழகத்தில் நுழையும் தருணத்தில் இலங்கையின் யாழ்ப்பாணத்திலும் சில சேதங்களை ஏற்படுத்திச் சென்றுள்ளது.
இந்நிலையில் அடுத்துவரும் சில தினங்களில் மற்றும் இரு புயல்கள் தோன்றுவதற்கான சாத்தியங்கள் தென்படுவதாக செயற்கைக்கோள் படங்கள் காண்பிக்கின்றன.
இவற்றில் வங்காள விரிகுடாவில் தோன்றும் புரேவி எனும் புயல் ஆனது தென் தமிழகம் மற்றும் யாழ்ப்பாணத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.